Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை:எழுமலை அருகே கிணறு தோண்டும் போது கிரோனுடன் மண் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பஞ்சாயத்தைச் சேர்ந்தது சீல் நாயக்கன்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரின் தோட்டத்தில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் நாகமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி
(45), பால்சாமி (41), வேட்டை என்ற பாக்யராஜ் (35) ஆகியோர்கள் கிணற்றில் கிரேன் இயந்திரம் மூலம் கிணறு தோண்டும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கிணறுதோண்டும் பணிகளை மேற்கொண்டபோது கிரேனுடன் மண் சரிந்து
விழுந்து வேட்டை என்ற பாக்யராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த எழுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பழனிச்சாமி (45), பால்சாமி (41) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து எழுமலை போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.